உலக தலைவர்களின் பங்கேற்புடன் மீண்டும் திறக்கப்படவுள்ள நோட்ரே டேம் தேவாலயம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள நோட்ரே டேம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக திறக்கப்பட உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு குறித்த தேவாலயத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டது.
பிரான்ஸின் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் தேவாலயத்தை 5 வருடங்களுக்குள் புனரமைப்பு செய்வதாக அப்போது உறுதியளித்திருந்தார்.
உலகத் தலைவர்கள் பங்கேற்பு
இதற்கமைய, சுமார் 750 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டு இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரு சாத்தியமற்ற மறுசீரமைப்பை பிரான்ஸ் சாத்தியப்படுத்தியுள்ளதாக சரவதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த தேவாலய திறப்பு விழாவில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல உலகத் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri