இலங்கை வரும் விமான பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்ட பொருட்கள்,வர்த்தக அளவிலான பொருட்களை விமான நிலையத்தினூடாக எடுத்து வருவதை தவிர்க்குமாறு இலங்கை சுங்கம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்ற தவறினால், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, கடந்த சில நாட்களாக பயணிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருகின்றமை அதிகரித்துள்ளமையினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்கள்
இவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களில் தங்கம், சிகரெட், மருந்து அலங்கார செடிகள் போன்ற பொருட்களும், தற்காலிகமாக இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள சில பொருட்களும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில பயணிகள் சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட விதிமுறைகளை மீறி வணிக அளவுகளில் பொருட்களை கொண்டு வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, விமான நிலையம் வழியாக குறித்த பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் சுங்கப் பணிப்பாளர் பி.பி.எஸ்.சி.நோனிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam