கேலி கிண்டல்களை பொருட்படுத்த போவதில்லை-ஞானசார தேரர்
சவுதி அரேபியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட வைபவத்தில் கலந்துக்கொண்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் கேலி, கிண்டல்களை எந்த வகையிலும் பொருட்படுத்த போவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
போதும் என்று நினைக்கும் போது நிறுத்தி விடுவார்கள்
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஞானசார தேரர், “எவரும் விமர்சிக்கலாம், கிண்டல்களை முன்வைக்கவும் முடியும். யார் அவற்றை பொருட்படுத்துவது?. போதும் என்று அவர்கள் நினைக்கும் போது நிறுத்தி விடுவார்கள்.
இந்த நாட்டு மக்களுக்கு கேலி செய்யவும் விமர்சிக்கவும் மட்டுமே தெரியும். அவற்றை நான் பொருட்படுத்துவதில்லை” எனக் கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வந்த ஞானசார தேரர்
பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை இனங்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வந்த ஞானசார தேரர், கடந்த வெள்ளிக் கிழமை கொழும்பில உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற சவுதி அரேபியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட வைபவத்தில் கலந்துக்கொண்டார்.
இலங்கைக்கான சவுதி தூதுவரின் விசேட அழைப்புக்கு இணங்க அவர் அதில் கலந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் பின்னர் சமூக ஊடகங்களில் ஞானசார தேரருக்கு எதிராக விமர்சன ரீதியாகவும் கிண்டலாகவும் பதிவுகள் இடப்பட்டு அவை பகிரப்பட்டு வருகிறது.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

தடைகளை மீறி ரஷ்யா பக்கம் சாயும் சுவிட்சர்லாந்து: சுவிஸ் நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கை News Lankasri

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri
