அமெரிக்காவுக்கான தடை குறித்து அலட்டிக்கொள்ள விரும்பவில்லை: வசந்த கரன்னாகொட
அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் எனது பெயரும் எனது மனைவியின் பெயரும் இணைக்கப்பட்டமை தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை என்று வடமேல் மாகாண ஆளுநரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில், வசந்த கரன்னாகொட மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரோ அல்லது அவரது மனைவியோ அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வடமேல் மாகாண ஆளுநரிடம் ஊடகங்கள் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு
என் மீது எந்தவிதமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் எனது
பெயரும் எனது மனைவியின் பெயரும் இணைக்கப்பட்டமை தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள
விரும்பவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
