மனித உரிமைகள் தினத்தில் யாழில் காட்சிப்படுத்தப்பட்ட வடக்கின் மனித உரிமை மீறல்கள்(Photos)
இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் வடக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை உரிமை மீறல்கள் சம்பவங்கள் தொடர்பில் யாழ்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பான காட்சிபடுத்தலும் குறித்த ஆர்பாட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமை தினமான நேற்று(11.12.2023) யாழ்பாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக மேற்படி போராட்டம் இடம்பெற்றுள்ளது.
பெண்களிற்கு எதிரான வன்முறைகள்
குறிப்பக கவனயீர்ப்பு போராட்டத்தில் வலி வடக்கில் இராணுவத்தால் மக்களுடைய காணிகள் அபகரிக்கப்பட்டு மக்கள் 33வருடங்களாக இன்னும் அகதி முகாம்களிளும் உறவினர்கள் வீடுகளிலும் வசிக்கும் அவலம், இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டிருக்கும் (PTA) இளைஞர்களின் நிலை, மற்றும் மன்னார் மாவட்டத்தில் மக்களின் விருப்பத்திற்கு எதிராக இடம் பெறும் கனிய மணல் அகழ்வு, காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டம், பெண்களிற்கு எதிரான வன்முறைகள் தொடர்பான காட்சிபடுத்தலும் இடம் பெற்றுள்ளது.

மேலும், மன்னார் மற்றும் முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அதன் விசாரனைகளின் காணப்படும் தாமதத்தை வெளிப்படுத்துமுகமாக மனித புதைகுழியும் இதன்போது காட்சிபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam