ஹாலிவுட் இயக்குனர் ரொப் மற்றும் அவரது மனைவியினது மரணம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரொப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மிச்செல் ரெய்னர் ஆகியோர் உயிரிழந்த சம்பவத்தில், அவர்களது மகன் நிக் ரெய்னர் கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என சில சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கை கொள்ளை–கொலை பிரிவு விசாரித்து வருவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் பிரிவின் தலைவர் ஜிம் மெக்டொனல் தெரிவித்தார்.

இரவு முழுவதும் விசாரணை நடத்தி, சந்தேக நபராக நிக் ரெய்னரை கைது செய்தாகவும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிடப்படவில்லை.
ரெய்னர் தம்பதியினர் பிரென்ட்வுட் பகுதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணகைளின் போது சந்தேகத்தின் பேரில் அவர்களது மகன் நிக் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் இயக்குனர் ரொப் ரெய்னருக்கும் அவரது மகன் நிக்கிற்கும் இடையில் பொது வெளியில் கடுயைமான வாக்குவாதம் ஏற்பட்டதாக அவரது குடும்ப நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐந்து தசாப்தங்களாகவே ரொப் ரெய்னர் ஹாலிவுட்டில் பல திரைப்படங்களை இயக்கி பல சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
32 வயதான நிக் ரெய்னர், போதைப் பழக்கத்துடன் போராடிய அனுபவங்களை கடந்த காலங்களில் பொது வெளியில் பகிர்ந்து கொண்டிருந்தார்.