கனடாவில் பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகமாகவுள்ள புதிய தடை
கனடாவில் பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த தடை செய்வதற்கு ஒன்றாரியோ மாகாணத்தின் ரொறன்ரோ பாடசாலை சபை திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த யோசனைத் திட்டத்தை வரவேற்பதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கல்வி, சுகாதாரம் மற்றும் விசேட கல்வித் தேவைகளுக்கு மட்டும் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்தப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பாதக விளைவுகள்
எனினும் தற்பொழுது அதிகளவில் சமூக ஊடகப் பயன்பாடு உள்ளிட்ட பல காரணிகளினால் கையடக்கத்தொலைபேசி பாதக விளைவுகளை ஏற்படுத்துவதோடு இளம் தலைமுறையினரின் உளச்சுகாதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடசாலைகளில் கையடக்கத்தொலைபேசி பயன்பாட்டை மட்டுப்படுத்த அல்லது தடை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ரொறன்ரோ பாடசாலை சபை கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri
