ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
அமெரிக்க இராணுவம் ஈரான் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த வாரத்தில் நடத்தப்படும் இரண்டாவது இரவு நேரத் தாக்குதல் இதுவாகும். போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இடைக்கால ஒப்பந்தம் 'முடிவுக்கு வந்துவிட்டது' என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
செவ்வாய்க்கிழமையன்று ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற மூன்று சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் 'பதிலடியாகவே' இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்காவின் இந்த புதிய உள்கட்டமைப்புத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் சில மணி நேரங்களுக்குப் பிறகு அறிவித்துள்ளது.
மேலும், ஈரானின் உன்னதத் தலைவரான ஆயதுல்லா அலி கமேனியின் உடல், அந்நாட்டின் புனிதத் தலமான மஷாத் நகரில் இன்றையதினம்(9.7.2026)அடக்கம் செய்யப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.