பேரெழுச்சியுடன் நினைவேந்தலுக்கு தயாராகும் தாயகம்
தமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை ஈந்த நாயகர்களை மாவீரர் தினமான இன்றைய நினைவுகூர்வதற்குத் தாயகத்தில் மக்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் பேரெழுச்சியுடன் தயாராகி வருகின்றார்கள்.
மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள், விசேட இடங்களில் மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவீரர் துயிலும் இல்லங்கள் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
நேரலை - https://youtu.be/v_UrXy_ABII
ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி
மேலும் இன்றையதினம் மாலை 6.05 மணிக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
மேலும் மாவீரர் தினத்தை பேரெழுச்சியுடன் அனுஷ்டிப்பதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் கடந்த ஒரு வாரமாக மக்களின் பங்களிப்புடன் சிரமதானம் செய்யப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும், மேற்கு துயிலுமில்லங்கள்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்
இரட்டை வாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம்
தேராவில் மாவீரர் துயிலுமில்லம்
முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்
வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன். பாலநாதன் சதீசன் புதுக்குடியிருப்பில் வர்த்தக சங்கத்தினர் அனைத்து கடைகளையும் பூட்டி இன்றையதினம் மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க ஆதரவு வழங்கியுள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் பூட்டி யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக ஆதரவு வழங்கியுள்ளதாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 15 மணி நேரம் முன்

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு News Lankasri

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
