கோவிட் தொற்றுக்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை! - நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
கோவிட் தொற்றை குணப்படுத்துவதாக கூறி சமூக ஊடகங்களில் கூறப்படும் மருந்துகளால் மக்கள் ஏமாறவேண்டாம் என்று மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரியதர்ஷனி கலப்பதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கோவிட் நோயாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களுக்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகள் இருக்கின்றன.
எனினும் மருத்துவர்களின் பரிந்துரைகள் இல்லாமல் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள கோவிட் நோயாளிகள் இத்தகைய மருந்துகளை பயன்படுத்தக்கூடாது என்று அவர் கோரியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப்பணியகம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர், விட்டமின்கள் போன்றவற்றை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் எடுத்துக்கொள்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிராக இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. வைரஸுக்கு எதிரான தடுப்பூசி மட்டுமே இப்போது இருக்கும் ஒரே சிகிச்சையாகும்.
எனினும் சமூக ஊடகங்களில் பலர் ஊக்குவித்து வருகின்றனர். இத்தகைய மருந்துகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கோவிட் நோயாளிகள் காய்ச்சல் இருந்தால் பெரசிட்டமோல் எடுத்துக்கொள்ளலாம். பெரசிட்டமோல் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் எடுக்கப்பட வேண்டும்.
வயது வந்த ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு மாத்திரைகள் என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே எடுக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு அவர்களின் நிறைக்கு ஏற்ப கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
லொரட்டடின், ஃபெக்ஸோபெனடின் மற்றும் குளோர்பெனிரமின் போன்ற மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி மூக்கு ஒழுகுதல் அல்லது தொண்டை புண் போன்ற அறிகுறிகள் உள்ள நோயாளிகள் பயன்படுத்த முடியும்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அத்தகைய மருந்துகளைப் பயன்படுத்த ஆலோசனை பெற வேண்டும் என்று பேராசிரியர் பிரியதர்ஷனி கலப்பதி குறிப்பிட்டுள்ளார்.
கோவிட், நிமோனியா போன்ற சிக்கல்களுக்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் மருந்துகள் மருத்துவமனைகளிலும் மருத்துவ மேற்பார்வையின் கீழும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இந்தநிலையில் நாட்பட்ட நோய்களுக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் வைரஸ் தொற்றுக்கு ஆளான பிறகும் தங்கள் வழக்கமான மருந்துகளை நிறுத்தக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 20 நிமிடங்கள் முன்

ட்ரம்பால் பற்றியெரியப் போகும் மத்திய கிழக்கு.... ஈரானின் பதிலடிக்கு தயாராகும் அமெரிக்க இராணுவம் News Lankasri
