என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் அரசை கவிழ்க்கவே முடியாது: எதிரணிக்கு ரோஹித பதிலடி
"முடிந்தால் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவுக்கு(Mahindananda Aluthgamage) எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வாருங்கள். அரசின் பலத்தைக் காட்டுகின்றோம்." என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு( Sajith Premadasa) அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன( Rohitha Abegunawardhana) சவால் விடுத்துள்ளார்.
அத்துடன், விவசாயிகளைப் பயன்படுத்தி எதிரணிகள் போராட்டம் நடத்துகின்றன எனவும், இதன் பின்னணியில் முழுமையாக அரசியலே இருக்கின்றது எனவும் ஊடகங்களிடம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் மக்களின் அமோக ஆணையால் அமைக்கப்பட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசை எவராலும் கவிழ்க்கவே முடியாது எனவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, நாட்டை மீண்டும் 1988 - 1989 யுகத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்குச்
சிலர் முற்படுகின்றனர் என அமைச்சர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) ஜே.வி.பியினரை மறைமுகமாகச் சாடியுள்ளார்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam