சனல் - 4 ஊடகத்திற்கு தேவையானவாறு நாம் ஆடத் தேவையில்லை: ரணிலை ஆதரித்த மகிந்தவின் குரல்
சனல் - 4 ஊடகத்திற்கு தேவையானவாறு நாம் ஆட வேண்டியதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை சம்புத்தாலோக்க விகாரைக்கு இன்று(04.10.2023) சென்றிருந்த மகிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்குலக ஊடகங்களுக்கு கடுந்தொனியில் பேசியதனை வரவேற்பதாகத் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதிக்கு ஆலோசனை
தாம் என்றைக்குமே மக்களின் பக்கம் இருப்பதாகவும் மக்கள் துன்பத்தில் வாழ்வதின் காரணத்தினால் அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென கோருவதாகவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
'' தற்போதைய ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க முடியும். எனினும் அதனை பலவந்தமாக செய்ய முடியாது.
மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து ஜனாதிபதி ஆலோசனை கோரினால் அதனை வழங்கத் நான் தயார்.
தாம் ஆட்சி செய்தது போதும். தற்பொழுது புதிய தலைமைத்துவம் உருவாக வேண்டும். எனக்கு மீண்டும் ஆட்சிக்கு வரும் உத்தேசமில்லை'' என தெரிவித்துள்ளார்.





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
