கோட்டாபயவை சூழும் தமிழர்களின் சாபங்கள் - ராஜபக்சர்கள் மீது பாய தயாராகும் கடுமையான சட்டம்
இலங்கையில் குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டு, பல்வேறு கொடுமைகள் தற்போது வரை அரங்கேற்றப்பட்டு வருகிறது.
இந்த சட்டத்தை கடுமையாக பிரயோகிக்கும் நடவடிக்கையை கடந்த காலங்களில் ராஜபக்சர்களே தீவிரமாக முன்னெடுத்திருந்தனர்.
அதில் முக்கியமான பங்கு வகித்தவர் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ச.
தமிழர்கள் சிறைகளில் நரக வேதனை
இன்றுவரையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர்கள் சிறைகளில் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புள்ளதாக கோட்டாபயவை கைது செய்ய அநுர அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது கடும் அச்சம் அடைந்துள்ள கோட்டாபய தனது கைது நடவடிக்கையினை தடுக்கும் தீவிர சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தன்னை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்குமாறு கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் கோட்டாபய ராஜபக்ச தொடர்புடையவர் என்பதனை நிரூபிக்கும் எந்தவொரு ஆதாரமும் இதுவரை வெளியிடப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச சார்பில் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் சட்டத்திற்குப் புறம்பாக அவர் கைது செய்யப்பட்டால் அவரது சுதந்திரம் பறிக்கப்படும் என குறிப்பிட்டார்.
கோட்டாபயவை கைது செய்ய நடவடிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக Channel 4 ஊடகத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
Channel 4 ஊடகத்தின் தகவல்களின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தனது கட்சிக்காரர் கைது செய்யப்படுவதற்கான அவதானம் காணப்படுவதாக சட்டதரணி குறிப்பிட்டுள்ளார்.
“தனது கட்சிக்காரர் அவ்வாறு கைது செய்யப்பட்டால் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கோட்டை நீதவானினால் அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது கட்சிக்காரர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராகப் பணியாற்றியவரும், இந்த மனுவின் பிரதிவாதியுமான ஷானி அபேசேகர, போலிச் சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவராகும். அதனால் அத்தகைய ஒருவரிடமிருந்து நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை எதிர்பார்க்க முடியாது.
சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஒரு கைப்பொம்மை போல நடந்துகொள்கிறது. மனுதாரர் கைது செய்யப்பட்டால் அவரது சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை நீதியின் கோட்பாடு மீறப்படும்.
மனுதாரர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. எனவே, மனுதாரரைக் கைது செய்வது சட்டவிரோதமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam