இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் படுகொலை - பொலிஸார் வெளியிட்ட பகீர் தகவல்கள்
கண்டி, தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண் தொடர்பான பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் 33 வயதான ஷம்யா தர்ஷனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிரிந்த பெண்ணும் அவரின் காதலனும் கனடாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பெருந்தொகை பணம் கடனாக பெற்றிருந்தார்.
மன அழுத்தம்
எனினும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்தமையினால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை மீள கோரியுள்ளனர்.

இதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக கடந்த மூன்றாம் திகதி நுவரெலியாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டு சென்ற காரில் இருந்து குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது காதலனே சடலத்தைக் காரில் எடுத்துவந்து தெல்தெனிய பகுதியில் உள்ள இடத்தில் கைவிட்டு தப்பிச் சென்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் இயன்முறை வைத்தியராக பணிபுரிந்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது.
அவர் கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தகவல்களைக் கண்டறிந்துள்ளனர்.
வைத்திய ஆலோசனை
அதன்படி, அந்த ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்தபோது, மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

சந்தேக நபரான காதலன் கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் என்றும், அவர் தற்போது அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த மூன்றாம் திகதியில் இருந்து 16ஆம் திகதி வரை நுவரெலியா ஹோட்டலில் தங்கியிருந்த காலப்பகுதியில், பல நாட்கள் தான் உணவு கொள்ளவில்லை என அவரின் சகோதரனுக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்ததாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்கான வைத்திய ஆலோசனை பெற்றதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தலைமறைவாகி உள்ள காதலனை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கண்டி, கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான காதலனுக்கும் உயிரிழந்த பெண்ணுக்கும் இடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri