பிரான்ஸில் விசா இன்றி தவிக்கும் தமிழர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் - அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பிரான்ஸில் விசா பெற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வந்த தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது..
அதற்கமைய தொழிலாளர் பற்றாக்குறையாக உள்ள துறைகளை அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் உணவகம் மற்றும் ஹோட்டல் துறையும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
தொழில் வாய்ப்பு
இதன் காரணமாக பெருமளவு தமிழர்கள் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொண்டு, அதன் மூலம் விசா பெற்றுக்கொள்ள முடியும்.
உரிமையாளரின் அனுமதியுடன் சட்ட ரீதியாக விசாவை பெற்றுக்கொள்ள முடியும் என்பது சிறம்பம்சமாகும்.
சிறைத்தண்டனை
உணவகத் துறையில் சமையல்காரர்கள், பரிமாறுபவர்கள் மற்றும் சமையலறை உதவியாளர்கள் போன்ற வெற்றிடங்களை பூர்த்தி செய்ய வெளிநாட்டவர்களை இணைத்துக் கொள்ள முடியும்.
இதேவேளை பிரான்ஸ் சட்டத்திற்கு அமைய விசா இல்லாத ஒருவரை பணிக்கு அமர்த்துவது பாரிய குற்றமாகும். 30,000 யூரோ அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 1 நாள் முன்

வலுவான ஆயுதங்களால் ரஷ்யாவை தாக்கலாம்... உக்ரைனுக்கு கட்டுப்பாடுகளை நீக்கிய மேற்கத்திய நாடுகள் News Lankasri

சொத்துக்களை இழந்தேன்! நடிகை ராதிகாவின் சீரியல் என்னை கிழவன் ஆக்கிவிட்டது.. நடிகர் பப்லூ பேச்சு Cineulagam

Brain Teaser Maths: அதி புத்திசாலிகளுக்கு மட்டும் தெரிந்த புதிர் - உங்களால் தீர்க்க முடியுமா? Manithan
