இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக சுரேன் ராகவன் தெரிவு
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன், இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க (Dhammika Dasanayaka) தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தின், இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் நிர்வாகிகளை தெரிவு செய்யும் விசேட கூட்டம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில் நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் உதயன கிரிதிகொட, உப தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டயனா கமகே, இஷாக் ரஹ்மான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தவிர இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் பொருளாளராக எஸ்.சிறிதரனும் உப செயலாளராக கீதா குமாரசிங்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாகிகளை தெரிவு செய்ய நடைபெற்ற இந்த கூட்டத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனும் கலந்துக்கொண்டார்.
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri