இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக சுரேன் ராகவன் தெரிவு
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன், இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க (Dhammika Dasanayaka) தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தின், இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் நிர்வாகிகளை தெரிவு செய்யும் விசேட கூட்டம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில் நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் உதயன கிரிதிகொட, உப தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டயனா கமகே, இஷாக் ரஹ்மான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தவிர இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் பொருளாளராக எஸ்.சிறிதரனும் உப செயலாளராக கீதா குமாரசிங்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாகிகளை தெரிவு செய்ய நடைபெற்ற இந்த கூட்டத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனும் கலந்துக்கொண்டார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri
