இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக சுரேன் ராகவன் தெரிவு
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன், இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க (Dhammika Dasanayaka) தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தின், இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் நிர்வாகிகளை தெரிவு செய்யும் விசேட கூட்டம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில் நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் உதயன கிரிதிகொட, உப தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டயனா கமகே, இஷாக் ரஹ்மான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தவிர இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் பொருளாளராக எஸ்.சிறிதரனும் உப செயலாளராக கீதா குமாரசிங்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாகிகளை தெரிவு செய்ய நடைபெற்ற இந்த கூட்டத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனும் கலந்துக்கொண்டார்.
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri