இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக சுரேன் ராகவன் தெரிவு
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன், இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க (Dhammika Dasanayaka) தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தின், இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் நிர்வாகிகளை தெரிவு செய்யும் விசேட கூட்டம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில் நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் உதயன கிரிதிகொட, உப தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டயனா கமகே, இஷாக் ரஹ்மான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தவிர இலங்கை - கனேடிய நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் பொருளாளராக எஸ்.சிறிதரனும் உப செயலாளராக கீதா குமாரசிங்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாகிகளை தெரிவு செய்ய நடைபெற்ற இந்த கூட்டத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனும் கலந்துக்கொண்டார்.

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
