ஊவா மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் நியமனம்
ஊவா மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக பி.ஏ.ஜி. பெர்னாண்டோ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (28) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பி.ஏ.ஜி. பெர்னாண்டோ, முன்னதாக மேல் மாகாண கல்வி, கலாச்சார மற்றும் கலை விவகாரங்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் , தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக பணியாற்றியிருந்தார்.
பிரதம செயலாளர் நியமனம்
இந்நிலையில் இன்று தொடக்கம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊவா மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக கடமையாற்றியிருந்த எம்.எல். கம்மன்பில, கோட்டாபய அரசாங்கத்தின் பிரபலமான மனிதக் கழிவு உரம் விவகாரம் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan