உயிருடன் வந்த நெதன்யாகு.. வதந்திகளுக்கு முற்றுபுள்ளி - காணொளியில் அவர் செய்த செயல்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இறந்துவிட்டதாகவும், அவர் வெளியிட்ட காணொளி AI என்றும் பல தகவல்கள் வெளியான நிலையில் அவர் மரண வதந்திகளுக்கு புதிய காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளியில் ஒரு கோப்பி கடையில் கோப்பி ஓர்டர் செய்துகொண்டு தன்னைப் பற்றி பரவிய வதந்திகளை நகைச்சுவையாக எடுத்துரைக்கிறார். “நான் இறந்துவிட்டேன்… கோப்பிக்காக” என்று அவர் கூறினார்.
மக்களுக்காக இறக்க தயார்
மேலும், உண்மையில் என்ன தெரியுமா? நான் என் மக்களுக்காக இறக்க தயார். அவர்கள் காட்டும் நடத்தைகள் அற்புதமாக இருக்கின்றன” என்றும் அவர் கூறினார். அவர் இரு கைகளையும் உயர்த்தி தனது விரல்களை காணொளியில் காட்டுகின்றார்.
אומרים שאני מה? צפו >> pic.twitter.com/ijHPkM3ZHZ
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) March 15, 2026
சமூக ஊடகங்களில் பரவிய சில பதிவுகள், வியாழக்கிழமை நடைபெற்ற அவரது செய்தியாளர் சந்திப்பின் காணொளியில் ஒரு கையில் ஆறு விரல்கள் இருப்பது போல தெரிகிறது என்றும், அது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகவும் கூறியிருந்தன.
இதற்கு பதிலளித்த பெஞ்சமின் நெதன்யாகு “என் விரல்களை எண்ண விரும்புகிறீர்களா? இங்கே பாருங்கள்… இங்கேயும் பாருங்கள். பார்த்தீர்களா? மிகவும் நல்லது” என்று நகைச்சுவையாக கூறினார்.
ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி! சந்தேகத்துடன் இருந்த அயதுல்லா அலி கமேனி - வெளியாகும் புதிய தகவல்கள்
ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள்
இஸ்ரேல் மக்களுக்கான தனது செய்தியில் அவர், “வெளியே சென்று சற்று சுத்தமான காற்றை சுவாசியுங்கள். ஆனால் பாதுகாப்பான இடத்திற்கு அருகிலேயே இருங்கள். உங்கள் மனவலிமை எனக்கும், அரசுக்கும், Israel Defense Forces (IDF) மற்றும் Mossad ஆகியவற்றுக்கும் வலிமையை அளிக்கிறது.

இப்போது எல்லாவற்றையும் நான் வெளிப்படுத்த முடியாது, ஆனால் இன்று கூட நாங்கள் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்துகிறோம்” என்றார்.
மேலும், “Home Front Command வழங்கும் அறிவுறுத்தல்களை எப்போதும் கேட்டு பின்பற்றுங்கள். நகர மேயர்களின் அறிவுறுத்தல்களையும் கவனியுங்கள். எப்போதும் பாதுகாப்பான இடத்திற்கு அருகில் இருங்கள். கட்டுப்பாடுகளை முடிந்தவரை தளர்த்த முயற்சிப்போம். இந்த கோப்பிக்கு நன்றி – மிகவும் அருமையாக உள்ளது,” என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.