ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி! சந்தேகத்துடன் இருந்த அயதுல்லா அலி கமேனி - வெளியாகும் புதிய தகவல்கள்
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தன் மகன் மொஜ்தபா கமேனி அதிகாரத்தைப் பெறுவது குறித்து சந்தேகத்துடன் இருந்ததாக, அமெரிக்க நுண்ணறிவு தகவல்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
தனது மகன் அதிகாரத்தைப் பெறுவது குறித்து அயதுல்லா அலி கமேனி கவலைப்பட்டிருந்தார்.
தகுதி குறைவு
காரணம், அவர் மிகுந்த அறிவாளி அல்ல என்று கருதப்பட்டதும், நாட்டின் தலைவராக தகுதி குறைவாக இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டிருந்தார்.

மேலும், தனது மகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சினைகள் இருப்பதைப் பற்றியும் தந்தை அறிந்திருந்ததாக குறித்த தகவல் சுட்டிக்காட்டுகின்றன.
மார்ச் 8ஆம் திகதி உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து மொஜ்தபா கமேனி பொதுவில் காணப்படவில்லை.
எனினும் இன்று(15) ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அவர் “நலமாக உள்ளார்” என்றும் “நிலையை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்” என்றும் தெரிவித்தார்.