ஈரானின் அடுத்த இலக்கு! நெதன்யாகுவை குறிவைத்து விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நிச்சயம் கொல்லாமல்விடமாட்டோம் என ஈரான் இராணுவம் பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது.
குழந்தைகள், சிறுவர்களை நெதன்யாகு கொலை செய்து வரும் நிலையில், முழு பலத்துடன் தாக்குதல் வேட்டை தொடரும் என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது.
நெதன்யாகு உடல்நிலை குறித்து சர்ச்சை
இதேவேளை, ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்திய தாக்குதலில் காயமடைந்து கொல்லப்பட்டுவிட்டதாக சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வெளியாகி மத்திய கிழக்கு பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு உடல்நிலை குறித்து பரப்பப்படும் தகவலை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்து ஏஐ வீடியோ பரப்பப்படுவதாகவும், அவர் நல்ல உடல் நலனுடன் இருப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
செங்கடலை இலக்கு வைக்கும் ஹவுதிகள்! ஹோர்முஸை தொடர்ந்து மூடப்படும் மற்றுமொரு நீரிணை - கேள்விகுறியாகும் உலக வர்த்தகம்
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam