அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை நிறைவு: சுவிட்சர்லாந்திலிருந்து நாடு திரும்பிய ஈரான்
அமெரிக்காவுடன் 18 மணி நேரம் நீடித்த தீவிரமான உயர்மட்டப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஈரானின் முதன்மைப் பேச்சுவார்த்தைக் குழு சுவிட்சர்லாந்திலிருந்து தலைநகர் தெஹ்ரானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தக் கலந்துரையாடலில், ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மத்திய வங்கி ஆளுநர் அப்துல்நாசர் ஹெம்மாதி, துணை எண்ணெய் துறை அமைச்சர் ஹமீத் போர்ட் மற்றும் அணுசக்தி பேச்சுவார்த்தையாளர் அலி பக்ரி ஆகியோர் அடங்கிய மிக முக்கியப் பிரதிநிதிகள் குழு கலந்துகொண்டுள்ளனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இருப்பினும், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான தொழில்நுட்ப ரீதியிலான ஆலோசனைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக, ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரீபாபாடி தலைமையிலான தொழில்நுட்பக் குழுவினர் இன்னமும் சுவிட்சர்லாந்திலேயே தங்கியுள்ளனர்.

இந்தத் தொழில்நுட்பக் குழுவினர் அங்குள்ள அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri