மாவீரர்களை நினைவு கூர முடியாது! முன்னாள் அமைச்சர் நவீன் காட்டம்
இலங்கையில் விடுதலைப்புலிகளை அஞ்சலிப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake) வலியுறுத்தியுள்ளார்.
தமிழர் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இம்முறை மாவீரர் தினம் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் நினைவேந்தல்
இது தொடர்பில், ஊடகங்களிடம் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நாம் முழுமையான எதிர்ப்பைப் பதிவு செய்கின்றோம்.
விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது அமைப்பாகும் எனவே அந்த அமைப்பை நினைவுகூர முடியாது.எனது தந்தையையும் விடுதலைப்புலிகளே கொலை செய்தனர்.
புலிகளுடன் தொடர்புடையவர்களை நினைவுகூருவதற்கு நிரந்தரத் தடை விதிப்பது தொடர்பான உறுதியான முடிவை அநுர (Anura kumara Dissanayake) அரசு எடுக்க வேண்டும்." - என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 12 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri