கொழும்பில் துறைமுக நகரில் அதிசொகுசு படகில் இளைஞர் மற்றும் யுவதிகளின் மோசமான செயல்
கொழும்பு துறைமுக நகரில் சொகுசு படகில் இளைஞர் யுவதிகளுக்காக நடத்தப்பட்ட விருந்துபசாரம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, உரிமமின்றி மதுபானம் விற்பனை செய்த இரண்டு சிற்றுண்டிச்சாலைகள் உள்ளிட்ட 3 இடங்களும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரி சிறப்புக் செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான சந்தை மதிப்புடைய 19,500 மில்லிலீட்டர் உள்நாட்டு மதுபானம், 45,400 மில்லிலீட்டர் வெளிநாட்டு மதுபானம் மற்றும் 2,44,925 மில்லிலீட்டர் பியர் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் கைது
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரி சிறப்புக் செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த 3 சந்தேக நபர்களும் கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri