மாவீரர்களை நினைவு கூர முடியாது! முன்னாள் அமைச்சர் நவீன் காட்டம்
இலங்கையில் விடுதலைப்புலிகளை அஞ்சலிப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake) வலியுறுத்தியுள்ளார்.
தமிழர் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இம்முறை மாவீரர் தினம் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் நினைவேந்தல்
இது தொடர்பில், ஊடகங்களிடம் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நாம் முழுமையான எதிர்ப்பைப் பதிவு செய்கின்றோம்.
விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது அமைப்பாகும் எனவே அந்த அமைப்பை நினைவுகூர முடியாது.எனது தந்தையையும் விடுதலைப்புலிகளே கொலை செய்தனர்.
புலிகளுடன் தொடர்புடையவர்களை நினைவுகூருவதற்கு நிரந்தரத் தடை விதிப்பது தொடர்பான உறுதியான முடிவை அநுர (Anura kumara Dissanayake) அரசு எடுக்க வேண்டும்." - என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri