துருக்கி நோக்கிய ஈரானிய ஏவுகணையை அதிரடியாக சுட்டு வீழ்த்திய NATO பாதுகாப்பு படை
துருக்கி நோக்கிச் சென்ற ஈரானிய ஏவுகணையை நேட்டோ வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கிய வான்வெளியை நோக்கிச் சென்ற ஈரானிய ஏவுகணையை நேட்டோ வான் பாதுகாப்புப் படையினர் தாக்கியதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடும் எச்சரிக்கை
மேலும் குறித்த தாக்குதலில் துருக்கிய மொழியில் எழுதப்பட்ட ஒரு அறிக்கையில், எந்த உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இல்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏவுகணை "ஈராக் மற்றும் சிரிய வான்வெளி வழியாகச் சென்று துருக்கிய வான்வெளியை நோக்கிச் செல்வது கண்டறியப்பட்டது,
பிராந்தியத்தில் மோதல் மேலும் பரவுவதற்கு காரணமான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் நாங்கள் எச்சரிக்கிறோம்" என்று நேட்டோ நாடுகளின் உறுப்பு நாடான துருக்கி எச்சரித்துள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 20 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan