நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு
நாடு முழுவதும் சுமார் 600 மருத்துவமனைகளின் சுகாதாரப் பணியாளர்கள் இன்று காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக அரச செவிலியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச செவிலியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார துறை ஊழியர்களை, வழமையான பணிகளுக்கு திரும்ப அழைப்பது குறித்து அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அடையாள பணி விலகல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
எனினும் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை, பெண்களுக்கான காஸ்டல் ஸ்ட்ரீட் மருத்துவமனை மற்றும் அபேக்ஷா மருத்துவமனையில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என ரத்னபிரிய குறிப்பிட்டார்.
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan