இவ்வருட இறுதிக்குள் மீள்திறக்கப்படவுள்ள தேசிய கலாபவனம்
சுமார் 14 வருடங்களாக மூடப்பட்டுள்ள தேசிய கலாபவனம் இவ்வருட இறுதிக்குள் திறக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் புராதன ஓவியங்களின் பாதுகாப்புக் களஞ்சியம் மற்றும் காட்சிக் கூடமாக தேசிய கலாபவனம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புதிய ஓவியர்களின் கண்காட்சிகளும் அங்கு நடைபெறுவது வழக்கமாகும். கடந்த 2012ஆம் ஆண்டு தேசிய கலாபவனம் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டது.
அக்காலப் பகுதியில் அங்கிருந்த விலைமதிப்பற்ற புராதன ஓவியங்கள் அன்றைய ஆட்சியாளர்களால் திருடப்பட்டுள்ளதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
163.5 மில்லியன் ரூபா
அதன் பின்னர் கடந்த 2020ஆம் ஆண்டு கலாபவனத்தின் கிழக்கு அரங்கின் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்பட்ட போதும், 2020ஆம் ஆண்டின் டிசம்பர் 19ஆம் திகதி மீண்டும் முற்றாக மூடப்பட்டது.

கலாபவனத்தின் புனரமைப்பு வேலைகள் ஓரளவுக்கு நிறைவடைந்துள்ள நிலையிலும், அதனுடன் இணைந்ததாக உள்ள ஜோன் டி சில்வா அரங்கின் புனரமைப்பு வேலைகள் தாமதமடைவதன் காரணமாக கலாபவனம் மீண்டும் திறக்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது குறித்த புனரமைப்பு செயற்பாடுகளுக்காக 163.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜோன் டி சில்வா அரங்கின் புனரமைப்பு வேலைகள் தொடர்ந்து; தாமதமடைந்து வருவதன் காரணமாக அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதியில் பயன்படுத்தி கலாபவனத்தின் புனரமைப்பு செயற்பாடுகளை நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள்ளாக தேசிய கலாபவனத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, கலாசார விவகாரங்கள் அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிக்குவின் தொலைபேசியில் அம்பலமான பல தகவல்கள்..! கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள் - வெடிக்கும் புதிய சர்ச்சை..