இலங்கையை உலுக்கிய நானுஓயா விபத்து! ஜனாதிபதி பிறப்பித்துள்ள பணிப்புரை

Sri Lanka Upcountry People Nuwara Eliya A D Susil Premajayantha Ranil Wickremesinghe
By Jenitha Jan 25, 2023 11:07 AM GMT
Report

நானுஓயா ரதெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு உடனடியாக நட்டஈடு வழங்க கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரம் வழங்கியுள்ளதாக வெகுஜன ஊடக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவிக்கையில், தேர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவர்கள் உட்பட பல குழுக்களுடன் பேசியதாகவும், முடிந்தவரை விரைவாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

இலங்கையை உலுக்கிய நானுஓயா விபத்து! ஜனாதிபதி பிறப்பித்துள்ள பணிப்புரை | Nanu Oya Accident Ranil Wickremesinghe

அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை

பேருந்தில் ஏறக்கூடிய அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நிர்ணயித்துள்ளதாகவும், இதன் விளைவாக, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்ப்பதற்கான திட்டங்களை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீதி பாதுகாப்பு நிறுவகத்தின் தலைவரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் நிஷங்க இந்தக் குழுவிற்குப் பொறுப்பேற்றுள்ளதாகவும், ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையை உலுக்கிய நானுஓயா விபத்து! ஜனாதிபதி பிறப்பித்துள்ள பணிப்புரை | Nanu Oya Accident Ranil Wickremesinghe

குழுவின் ஏனைய உறுப்பினர்களாக மோட்டார் வாகன திணைக்களத்தின் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) டி.குசலனி டி சில்வா, ஸ்ரீயானி ஹேவகே, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் எச்.ஆர்.பசிந்து, கல்வி அமைச்சின் பாடசாலை விவகார பிரதிப் பணிப்பாளர் இந்திக ஹபுகொட மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஷெரீன் அத்துகோரல ஆகியோர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏழு பேர் பலி

கடந்த 20ஆம் திகதி நானுஓயா - ரதெல்ல பகுதியில் கொழும்பில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று வான் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுடன் மோதுண்டதில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 51 பேர் படுகாயமடைந்திருந்தனர். 

இதன்போது, வானில் பயணித்த 9 பேரில் ஆறு பேரும் முச்சக்கர வண்டி சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வானில் பயணித்த தாய், தந்தை, இரு பிள்ளைகள், உறவினர் ஒருவர் மற்றும் சாரதி ஆகியோர் ஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், முச்சக்கரவண்டி சாரதி நானுஓயா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார். 


GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US