பலத்த பாதுகாப்பில் சிறைச்சாலையிலிருந்து நாடாளுமன்றம் வரும் நாமல்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு இன்றைய தினம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய, நாமல் ராஜபக்சவை அமர்வில் கலந்துகொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள்
நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் கலந்துகொள்வதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு, நாடாளுமன்ற செயலாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு நாமல் ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு அமையநாடாளுமன்றத்தின் விதிகள் மற்றும் தற்போதுள்ள மரபுகளின்படி, இது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (08) நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எயார்பஸ் (Airbus) விமானங்கள் கொள்முதல் மோசடியில் சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 4 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருடப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள்..! இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri