அமைச்சர் நாமல் தலைமையில் யாத்திரை செல்லும் பிக்குகள் குழு!
புத்தர் பரிநிர்வாணம் அடைந்த உத்தரபிரதேச குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச விமான நிலையத்தை திறப்பதற்கான முக்கிய யாத்திரைக்காக, அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தலைமையில் 100க்கும் மேற்பட்ட பிக்குகள், இந்தியாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விமானத்தில் இந்தியாவுக்கு செல்லவுள்ளனர்.
கடந்த ஆண்டு இரண்டு நாட்டு தலைவர்களுக்கிடையேயான மெய்நிகர் உச்சிமாநாட்டின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு அளித்த வாக்குறுதியை வைத்து இந்த விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அணி எதிர்வரும், பூரணை (அக்டோபர் 20) குஷிநகருக்கு புறப்படவுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga), வீட்டுவசதி மற்றும் சமூக உள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) மற்றும் புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் அதிகாரிகள் இந்த யாத்திரையில் பங்கேற்பார்கள்.

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri
