வடக்கு இளைஞர்களை கைது செய்ய மட்டுமே பயங்கரவாத தடை சட்டம்! நாமல் விசனம்
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாதாள உலகக் கும்பலை கைது செய்ய பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்த மாட்டோம் என கூறியதை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார்.
வடக்கு மற்றும் தெற்கில் முகநூல் பதிவுகளுக்காக கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தை அரசாங்கம் பிரயோகித்ததாக நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
ஆட்டுத் தோல் போர்த்திய புலிகள்
இந்த அரசாங்கம் பயங்கரவாதத் தடை சட்டத்தை இல்லாமல் செய்யும் என்ற நம்பிக்கையில் வடக்கு கிழக்கு மக்கள் அவர்களுக்கு வாக்களித்ததாக சுட்டிக்காட்டிய நாமல், அரசாங்கம் அவர்களை ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய கட்சி பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டங்களை ஆதரிப்பதாகவும் நாங்கள் அதில் வெளிப்படையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மற்றவர்களை போல நாங்கள் ஆட்டுத் தோல் போர்த்திய புலிகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 9 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri