நாமல், ஜீவன் உட்பட 12 பேருக்கு அமைச்சு பதவி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய புதிய அமைச்சர்களில் 10 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், எஞ்சிய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்படவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுளளள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்மொழிவு
நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, ஜனக பண்டார தென்னக்கோன், எஸ்.பி.திஸாநாயக்க, விமல வீர திஸாநாயக்க, சரத் வீரசேகர, எஸ்.எம்.சந்திரசேன ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்மொழிந்துள்ளது.
ஏனைய கட்சிகள்
ஏனைய கட்சிகளில் இருந்து ஜீவன் தொண்டமான் (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்) மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா (தேசிய காங்கிரஸ்) ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று முன்தினம் 37 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri
