புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் என்.எம். ஆலம் கோரிக்கை

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Government Of Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government
By Ashik Jan 28, 2026 11:14 AM GMT
Report

அநுர அரசு கொண்டு வந்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை காப்பாற்றக்கூடிய சட்டம் எந்தவித திருத்தமும் இன்றி நீக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம். ஆலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் நேசக்கரம் பிரஜைகள் குழுவின் பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் இன்று(28.01.2026) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள அரச வங்கியில் பாரிய தங்க மோசடி! விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

கொழும்பிலுள்ள அரச வங்கியில் பாரிய தங்க மோசடி! விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் அரசு கொண்டு வந்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை காப்பாற்றக்கூடிய சட்டமானது கடந்த காலங்களில் உள்ள அரசு கொண்டு வந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி விட்டு அதற்கு பதிலாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டமாக இதை கூறினாலும், எதிர்வரும் மாதங்களில் குறித்த சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்ற உள்ளனர்.

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் என்.எம். ஆலம் கோரிக்கை | N M Alam S Request

இந்த சட்டமானது, ஒட்டு மொத்தமாக இலங்கை வாழ். மக்களுக்கு பொறுத்தமற்றது. பயங்கரவாத தடைச் சட்டத்தை எவ்வாறு நீக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோமோ, அதே போன்று தான் இந்ம சட்டமும் எந்தவித திருத்தமுமின்றி நீக்கப்பட வேண்டும்.

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வரப்பட கூடாது என்ற கருத்தையும் நாங்கள் முன் வைக்கின்றோம். குறித்த விடயம் தொடர்பாக சிவில் சமூகம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தெளிவாக குறித்த சட்டத்திற்கு எதிராக தமது கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடற்றொழிலாளர்கள் சமூகம் சார்ந்த நாங்களும் குறித்த விடையம் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்கிறோம்.

போராட்டங்கள் ஊடாகவும், ஊடகங்கள் ஊடாகவும் நாங்கள் பல்வேறு விடயங்களை இந்த அரசுக்கு தெரிவித்து கொள்கின்றோம். கதைப்பதற்கான உரிமையை கூட புதிதாக கொண்டு வரப்படவுள்ள சட்டத்தின் பிரிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் என்.எம். ஆலம் கோரிக்கை | N M Alam S Request

எனவே, அரசு இந்த சட்டத்தை மீளப்பெற்று, முன்பு இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தையும் இல்லாது செய்து, நாட்டிற்கு தேவையான பொதுவான பல சட்டங்கள் இருக்கிறது. அந்த சட்டத்தின் ஊடாக செயல்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.

போராடும் உரிமை பறிக்கப்படுகிறது..

இதேவேளை, தற்போது கொண்டு வரப்படவுள்ள சட்டமானது சாதாரணமாக விவசாயிகள் கடற்றொழிலாளர்கள் உள்ளடங்களாக பலருக்கு சுமையை ஏற்படுத்த உள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் கூட பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் நீதிமன்றம் ஊடாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடிய வகையில் அமைந்திருந்தது.

ஆனால் புதிதாக கொண்டு வரப்படவுள்ள சட்டமானது, ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றிற்கு மாத்திரமே முழுமையான அதிகாரத்தை வழங்கும் வகையில் உள்ளது.

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் என்.எம். ஆலம் கோரிக்கை | N M Alam S Request

போராட்டம் மற்றும் கருத்து கூறுதல் என்பது ஜனநாயக உரிமை. அந்த உரிமையை இல்லாது செய்கிற இந்த சட்டம் தேவையற்றது. நீக்கப்பட கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, மன்னார் நேசக்கரம் பிரஜைகள் குழுவின் போசகர் அன்ரனி சங்கர் மற்றும், வளர்பிறை பெண்கள் அமைப்பின் தலைவி றீற்றா வசந்தி ஆகியோரும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கிளிநொச்சியில் அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்

கிளிநொச்சியில் அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்

புதிய வரலாறு படைக்கும் தங்கம்: பாபா வங்கா கணிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல் - நடக்கப்போவது என்ன..!

புதிய வரலாறு படைக்கும் தங்கம்: பாபா வங்கா கணிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல் - நடக்கப்போவது என்ன..!

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US