லண்டனில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம பொதி - அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்
வடக்கு லண்டனில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் மர்ம பொதி ஒன்றினால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு குவிந்த பொலிஸார் உடனடியாக பொது மக்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பிரித்தானிய நேரப்படி இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து அந்த இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் குறித்த கட்டடத்தில் மர்ம பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார் உட்பட அவசர உதவி பிரிவுகள் அனைத்தும் சம்பவ இடத்தை வந்தடைந்த நிலையில் பொலிஸார் அவ்விடத்தை சுற்றி வளைத்துள்ளனர். அத்துடன் அங்கிருந்த மக்களை உடனடியாக வெளியேற்றியுள்ளனர்.
மர்ம பொதிக்குள் என்ன உள்ளதென இன்னமும் பொலிஸார் ஆராய்ந்து வரும் நிலையில் இதுவரையில் அது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஆராய்ந்த பின்னர் உடனடியாக தகவல் வழங்கப்படும் என தலைமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 11 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri