அநுர அரசை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முஸ்லிம் மக்கள்

Kandy Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Harini Amarasuriya
By Vethu Apr 28, 2025 03:28 AM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சிறி தலதா வந்தனாவ எனும் யாத்திரை நிகழ்வு நேற்றைய தினத்துடன் நிறைவடைந்துள்ளது.

பாரிய எதிர்பார்ப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்த யாத்திரை நிகழ்வு, அலைமோதும் மக்கள் கூட்டத்தினால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிகழ்வு குறித்து பல சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும், கண்டி மாநகரில் முஸ்லிம் மக்களின் செயற்பாடு குறித்து அநுர அரசாங்கத்திற்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

அடிப்படை வசதி

யாத்திரை நிகழ்வில் பங்கேற்ற பல இலட்சக்கணக்கான மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்த போதும், அங்கிருந்த முஸ்லிம் மக்களுக்கும், தேவையான பல உதவிகளை செய்துள்ளனர்.

அநுர அரசை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முஸ்லிம் மக்கள் | Muslim People Shows Humanity To Budhist

மக்களுக்கு உணவு வழங்குவதுடன், தங்கியிருப்பதற்கும் இடங்களை வழங்கி முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். இதன்மூலம் இன, மத நிலையை கடந்து முஸ்லிம் மக்களின் செயற்பாடு குறித்து அநுர அரசு நன்றி தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் முஸ்லிம் மக்களின் செயற்பாடுகள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நன்றி தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதல்முறையாக கண்டியில் உள்ள பள்ளிவாயல்கள் புனித தந்தத்தை வழிபட வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறக்கப்பட்டுள்ளதாகவும், இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் இலங்கையர்கள் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் 3 கோடி செலவில் இசை நிகழ்ச்சி! பாரிய மோசடி தொடர்பில் ஆளும் தரப்பு விளக்கம்

யாழில் 3 கோடி செலவில் இசை நிகழ்ச்சி! பாரிய மோசடி தொடர்பில் ஆளும் தரப்பு விளக்கம்

யாத்திரை நிகழ்வு

குருணாகலை, பரகஹதெனிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அநுர அரசை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முஸ்லிம் மக்கள் | Muslim People Shows Humanity To Budhist

இந்த நாடு மாறி வருகிறது, அதற்கேற்ப நாம் புதிய வழியில் செயற்பட வேண்டும். நாம் ஒரு புதிய வழியில் செயற்பட வேண்டும் என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

இந்த நாட்களில் புனித தந்தத்தை வழிபடுவதற்கான யாத்திரை நடைபெறுகிறது. அங்கிருந்த மக்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்று பாருங்கள்.

குறிப்பாக, வரலாற்றில் முதல் முறையாக, கண்டியில் உள்ள பள்ளிவாயல்கள் இரவு முழுவதும் புனித தந்தத்தை வழிபட வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறந்திருந்தன.

கண்டியில் வீசியெறியப்பட்ட 600 தொன் குப்பைகள்.. சிரமத்தில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள்

கண்டியில் வீசியெறியப்பட்ட 600 தொன் குப்பைகள்.. சிரமத்தில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள்

இன நல்லிணக்கம்

நித்திரை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது. அங்கு இன அல்லது மதப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. இன்னொரு இனத்திற்கான மரியாதை இருந்தது, இன்னொரு மதத்திற்கான மரியாதை இருந்தது.

அநுர அரசை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முஸ்லிம் மக்கள் | Muslim People Shows Humanity To Budhist

அது மாத்திரமின்றி கண்டியில் வர்த்தக நிலையங்களை திறந்து கொடுத்தார்கள். மழை பெய்யும் போது கடைகளுக்குள் நுழையவும் அனுமதி கொடுத்தார்கள்.

சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது தமிழர்கள் என்றல்லாது, அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இலங்கை அரசாங்கம் இருக்கிறது என்ற உணர்வின் காரணமாக இது நடக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US