298 பயணிகளுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்! குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
மலேசியன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, 2 ரஷ்யர்கள் மற்றும் 1 உக்ரைன் கிளர்ச்சியாளர் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
விசாரணை நடத்திய சர்வதேச விசாரணைக்குழு, தனது விசாரணை அறிக்கையில் மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக 4 பேர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.
இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும், லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை சுட்டு வீழ்த்தி 298 பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு நெதர்லாந்து நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri