பூவரசங்குளம் ஏற்று நீர்பாசன திட்டம் விவசாயிகள் பாவனைக்கு
முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 மில்லியன் ரூபா நிதி உதவியில் மாந்தை கிழக்கு பூவசரங்குளம் ஏற்று நீர்பாசன திட்டத்தினை வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராயா திறந்து வைத்துள்ளார்.
145 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 145 ஏக்கர் விவசாய நடவடிக்கைக்காக 50 மில்லியன் ரூபா செலவில் பூவரசங்குளத்தில் இருக்கும் நீரை மேட்டுநிலத்திற்கு ஏற்றும் செயற்திட்டமாக இது அமைந்துள்ளது.
உற்பத்தி செலவு அதிகரிப்பு.சந்தைப்படுத்தல் பிரச்சினயினை எதிர்கொண்டுவரும் விவசாயிகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா, வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஆளுனரின் பிரதம செயலாளர் சமன் பண்டுலசேணா, நவீனமயமாக்கல் செயத்திட்டதிட்ட பிரதி திட்ட பணிப்பாளர் கே.பத்மநாதன், வடமாகாண நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் வீ.பிறேம்குமார் மாகாண பிரதி பிரதம செயலாளர், நீர்பாசன திணைக்கள பொறியியலாளர்கள் அதிகாரிகள் மற்றும் மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச செயலாளர்கள், தவிசாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.





அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam