திருமதி இலங்கை போட்டியில் மோசடி இடம்பெறவில்லை! சந்திமால்
திருமதி இலங்கை போட்டியில் எவ்வித மோசடிகளும் இடம்பெறவில்லை என திருமதி இலங்கை போட்டி ஏற்பாட்டுக்குழுவின் பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியானது நிர்ணயிக்கப்பட்ட அடிப்படையில் வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்ட போட்டி என சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் போட்டித் தொடரில் அரசியல் தலையீடு மேற்கொள்ளப்பட்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் என ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்ற போட்டியாளர்கள் போட்டியின் இறுதி முடிவினை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட குரோதங்கள் முரண்பாடுகள் காரணமாக போலியான பிரச்சாரங்களும் வதந்திகளும் பரப்பரப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற திருமதி இலங்கை அழகுராணி போட்டியில் ஏற்பட்ட சர்ச்சைகள் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.