நாடாளுமன்ற உறுப்பினர்களது தனிப்பட்ட ஊழியர்கள் குறித்து ஹரினி வெளியிட்ட தகவல்
புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட ஊழியர்களாக நியமிக்க முடியாது என பிரதமர் ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் (Gampaha) தேசிய மக்கள் சக்தி (NPP) மகளிர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அமரசூரிய, புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மட்டுப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள்
உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் பிற வசதிகள் போன்ற வசதிகள் குறைவாகவே இருக்கும்.

எம்.பி.க்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தமது தனிப்பட்ட ஊழியர்களாக இனிவரும் காலங்களில் நியமிக்க முடியாது.
மேலும், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் நல்வாழ்வை விட நாட்டின் எதிர்காலத்திற்கான வளர்ச்சித் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam