நாடாளுமன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றில் இன்று விசாரணை

Law and Order Court of Appeal of Sri Lanka General Election 2024 Parliament Election 2024
By Rakesh Nov 04, 2024 04:29 AM GMT
Report

நாடாளுமன்றத் தேர்தல் (Parliament Election) எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறுமா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை இன்று (04) உயர்நீதிமன்றம் முன்னெடுக்கவுள்ளது.

அரசமைப்பில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்துக்கும் வாக்களிப்பு நடைபெற வேண்டிய தினத்துக்கும் இடையில் உள்ள காலம் பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் காலக் கணக்குக்கு ஒரு நாள் முன்னதாக தற்போது நாடாளுமன்றத் தேர்தல் திகதியிடப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, அடிப்படை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மனு மீதான விசாரணையே இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அரச சொத்துக்களை விரயம் செய்த முன்னாள் அமைச்சர் - அம்பலப்படுத்தும் அதிகாரி

அரச சொத்துக்களை விரயம் செய்த முன்னாள் அமைச்சர் - அம்பலப்படுத்தும் அதிகாரி

தீர்மானம் அரசமைப்புக்கு எதிரானது

இந்த விடயம் சம்பந்தமாக தேர்தல்கள் ஆணைக்குழு தனது அவதானிப்பு அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கடந்த வாரம் அனுப்பி வைத்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றில் இன்று விசாரணை | Hearing Today High Court Regard General Elections

இதனைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியதோடு, சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் தனது சமர்ப்பணத்தை இன்று செய்யவுள்ளார்.

முன்னதாக, எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசமைப்புக்கு எதிரானதென உத்தரவிடுமாறு கோரி சிவில் செயற்பாட்டாளரும் நாம் ஸ்ரீலங்கா தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளருமான எச்.எம்.பிரியந்த ஹேரத் கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதித் தினம்

இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட அதன் அங்கத்தவர்கள் உட்பட்டோர் பெயரிடப்பட்டனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு சட்டத்தின் 10 ஆவது விதந்துரைக்கமைய வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்காக ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11 ஆம் திகதிவரையான காலப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின்படி வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் முதல் ஐந்து வாரங்களுக்கு குறையாத, ஏழு வாரங்களுக்கு மேற்படாத காலப்பகுதிக்குள் தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றில் இன்று விசாரணை | Hearing Today High Court Regard General Elections

அதன்படி, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதித் தினமான ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் ஐந்து வார காலம் நவம்பர் 15ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அதேபோல் ஒக்டோபர் 11 முதல் ஏழு வார காலம் நவம்பர் 29ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நவம்பர் 14ஆம் திகதி அந்த சட்ட எல்லைக்குள் இல்லை என்று மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரை அறிவுறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலனற்றுப் போனதால், மக்களின் இறைமையும் நாட்டின் அரசமைப்பும் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டமைக்கு எதிரான உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றில் மேலும் கோரியிருந்தார்.

குறிப்பிட்ட கால அவகாசம்

இவ்வாறான நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை வாக்களிப்பைத் தீர்மானிப்பதற்குப் பதிலாக வழமை போன்று சனிக்கிழமையன்று 16ஆம் திகதிக்கு அதனை நடத்த ஒழுங்குபடுத்தி இருந்தால் அது அரசமைப்பு குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்குவதாக இருந்திருக்கும் எனவும் அந்த மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றில் இன்று விசாரணை | Hearing Today High Court Regard General Elections

நவம்பர் 15ஆம் திகதி பௌர்ணமி தினம் என்பதால் அரச விடுமுறை நாளாகும். ஆகையால் அடுத்த நாள் 16ஆம் திகதி தேர்தலை நடத்த இணக்கம் வரலாம் என்று உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக இணக்கம் ஏற்பட்டால் இரண்டு நாட்கள் தேர்தல் பிற்போடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

ரணிலுக்கு பதிலடி கொடுத்த தேசிய மக்கள் சக்தி

ரணிலுக்கு பதிலடி கொடுத்த தேசிய மக்கள் சக்தி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், London, United Kingdom, குப்பிளான்

10 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Aberystwyth, United Kingdom, இலங்கை, நியூஸ்லாந்து, New Zealand, New Jersey, United States

08 Aug, 2020
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை

08 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Le Blanc, France

09 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

01 Aug, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், தாவடி

10 Aug, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, கொழும்பு, Auckland, New Zealand

10 Aug, 2020
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி கல்வயல்

11 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, சரவணை, கொழும்பு, Le Blanc-Mesnil, France

02 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

08 Aug, 2022
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US