QR குறியீட்டில் எரிபொருள்! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிக்கல்
கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு வருவதில் தடைகளை எதிர்நோக்க நேரிடும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக தொலைதூர மாகாணங்களில் உள்ள எம்.பி.க்களையே இது பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
QR குறியீட்டு பதிவில் புதிய சிக்கல்! ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்
| QR குறியீட்டினை பதிவு செய்ய இங்கே அழுத்தவும்.. https://fuelpass.gov.lk/ |
எரிபொருளை பெறுவதில் சிக்கல்
எம்.பி.க்கள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறுவார்கள் என்றும், QR குறியீடு காரணமாக, அந்த அளவு எரிபொருளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு தனியான QR குறியீட்டின் கீழ் எரிபொருளை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இன்றும் நாளையும் தீர்மானம் எடுக்கவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான்கில் மூன்று பேர் வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், நாடாளுமன்றம் இன்று (17ஆம் திகதி) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி வரை கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்! Manithan