அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்

Parliament of Sri Lanka Vasudeva Nanayakkara Sri Lanka Final War
By Dharu Aug 06, 2024 01:05 PM GMT
Report

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தினால் தலைமைப் பொறுப்பிலிருந்து இருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கட்சியின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரத்ன நியமிக்கப்படடுள்ளார்.

எதிர் வரும்  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என இதற்கு முன்னர் அவர் அறிவித்திருந்தார்.

மன்னாரில் காணி அபகரிப்பு: ஜனாதிபதியிடம் கோரிக்கை

மன்னாரில் காணி அபகரிப்பு: ஜனாதிபதியிடம் கோரிக்கை

வாசுதேவ நாணயக்கார

தற்போது 85 வயதை கடந்துள்ள வாசுதேவ நாணயக்கார, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளார்.

ஜனவரி 3, 1939 இல் தென் மாகாணத்தில் உள்ள உடலமட்ட கிராமத்தில் பிறந்த வாசுதேவின் தந்தை பிரான்சிஸ் நாணயக்கார ஒரு வர்த்தகராவார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர் | Mp Preparing To Retire From Politics

இவரது தாயார் ஐரீன் எலிசபெத் விஜேசேகர திஸாநாயக்க.

நான்கு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் கொண்ட வாசுதேவ நாணயக்காரவின் குடும்பத்தில், திரைப்பட தயாரிப்பாளர் யசபாலித நாணயக்கார மற்றும் அரசியல் பிரமுகர் ஹேமகுமார் நாணயக்கார ஆகியோர் அவரின் சகோதரர்களாவர்.

காலி ரிச்மண்ட் கல்லூரியில் கல்வி பயின்ற இவர், இலங்கை சட்டக் கல்லூரியில் தகுதிபெற்று, சட்டப் பயிற்சியாளராகப் பணியாற்றியவராவார்.

நாணயக்கார 1958 இல் இலங்கை சமசமாஜக் கட்சியில் (LSSP) முதலில் இணைந்தார். 1970 நாடாளுமன்றத் தேர்தலில் சமசமாஜக் கட்சிக்காக கிரியெல்ல தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல் தொடர்பில் வெளியான போலிச் செய்திகள்! தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை

தேர்தல் தொடர்பில் வெளியான போலிச் செய்திகள்! தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை

ஜனாதிபதி தேர்தல்

நாணயக்கார பின்னர் சம சமாஜக் கட்சியை விட்டு வெளியேறி 1977 இல் புதிய சமசமாஜக் கட்சியை (NSSP) உருவாக்கினார். ஆனால் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

1982ல் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட அவர், .17,005 (0.26%) வாக்குகளை மாத்திரம் பெற்று ஐந்தாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

இந்நிலையளில், 1983 ஜூலை கலவரத்திற்குப் பிறகு இலங்கை அரசாங்கம் புதிய சமசமாஜக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (CP) ஆகியவற்றைத் தடை செய்தது.

அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர் | Mp Preparing To Retire From Politics

இதன்பின்னர் நாணயக்கார, கருணாரத்ன, ரோஹண விஜேவீர உள்ளிட்ட இடதுசாரி அரசியல்வாதிகள் 1985 தடை நீக்கப்படும் வரை தலைமறைவாகவே காணப்பட்டனர்.

அதன் பின்னர், 1987 இல், , புதிய சமசமாஜக் கட்சி, உள்ளிட்ட சில கட்சிகள் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியுடன் இணைந்து ஐக்கிய சோசலிசக் கூட்டணியை உருவாக்கியது.

இந்நிலையில், 1989ல் இடம்பெற்ற பொது தேர்தலில் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு நுளைந்தார் வாசுதேவ நாணயக்கார.

1994 நாடாளுமன்றத் தேர்தலுக்காக, நாணயக்கார நவசமசமாஜக் கட்சியை விட்டு வெளியேறி மக்கள் முன்னணியின் (PA) கூட்டணியான லங்கா சமசமாஜ கட்சியில்  மீண்டும் இணைந்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தின்  நாடாளுமன்ற வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட அவர் பின்னர் முன்னாள் ஜனாதிபதித் சந்திரிகா பனண்டாரநாயக்க அரசில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கட்சியை விட்டு வெளியேறி 1999 ஜனாதிபதித் தேர்தலிலும் ஒரு வேட்பாளராக போட்டியிட்டார்.

வங்கி வைப்புகளுக்கு வட்டி வீதங்களை அதிகரிக்க நடவடிக்கை - ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

வங்கி வைப்புகளுக்கு வட்டி வீதங்களை அதிகரிக்க நடவடிக்கை - ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

உள்நாட்டு போர்

இதனை தொடர்ந்து 2006 மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் மேயர் வேட்பாளராகப் நாணயக்கார போட்டியிட்டார். இதில் பெரும்பான்மை இழந்த நாணயக்கார தரப்பு சபையில் எதிர்க்கட்சியாகியது. தலைவரானார்.

இதன் பின்னர் இடம்பெற்ற 2010 நாடாளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட நாணயக்கார 2010 நாடாளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பியாக தெரிவு செய்யப்பட்டார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர் | Mp Preparing To Retire From Politics

பின்னர் மகிந்த ராஜபக்ச ஆதரவு முகாமை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

2020 இல் நீர் வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டார், ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் எதிர்க்கட்சிக்கு சென்றார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தின் போது, ​​பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வாசுதேவ கடுமையான வார்த்தைகளால் வசைபாடியமை பேசுபொருளான விடயமாகும்.

இலங்கையின் உள்நாட்டு போரின் போது போர் பகுதிகளில் வாழும் மக்கள் அதனுள் சிக்குண்டு இறத்தல் அபாய நிலைக்கு உற்படல் இடம் பெறலாம். ஆனால் பொது மக்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப் படும் இலங்கையில் நடக்கும் போர் மிருகத்தனமான மிலேட்ச செயலாகவே தாம் பார்ப்பதாகவும் இப்போரை உன்னிப்பாக நோக்குமிடத்து ஒரு சமுகத்தினரை அழித்தொழிக்கும் இனவழிப்பு நடவடிக்கை (genocide) என்றும் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

அரச பொய் பரப்புரைகளை எதிர்த்தல் இலங்கை அரச ஊடகங்கள் வெளியிடும் பொய் பரப்புரைகளை அப்பப்போது சுட்டிக் காட்டி அரசாங்கத்தை சவாலுக்குட்படுத்தியிருந்தார்.

கடமைகளை முறையாக பின்பற்றாத கோட்டாபய: மொட்டு எம்.பி சாடல்

கடமைகளை முறையாக பின்பற்றாத கோட்டாபய: மொட்டு எம்.பி சாடல்

புறக்கோட்டை குண்டு வெடிப்பு 

கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெற்ற ஒரு குண்டு வெடிப்பு நிகழ்வு தொடர்பாக இலங்கை அரச ஆதரவு ஊடகங்கள் தமிழீழ வீடுதலைப் புலிகளே இந்த குண்டு வெடிப்பை நடத்தினர் என்ற பரப்புரைகளை மறுத்து அதற்கான காரணிகளையும் விளக்கி இருந்தார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர் | Mp Preparing To Retire From Politics

ஊடகச் சுதந்திரம் தொடர்பில் ஆயுத பலத்தை பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அடக்குமுறைகளுக்கு உட்படுத்துவோர் பொதுமக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், தமிழ் சட்டத்தரணிகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களின் சார்பில் வாதிட முன்வரும் தமிழ் சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களை தேசத்துரோகிகள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் செய்தியை நீக்க வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்த தலைவராவார்.

இவ்வாறான அரசியல் பின்னணியை கொண்ட வாசுதேவ நாணயக்கார தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலால் ஐஎம்எப் உடன்படிக்கையில் மாற்றம் ஏற்படுமா..

ஜனாதிபதி தேர்தலால் ஐஎம்எப் உடன்படிக்கையில் மாற்றம் ஏற்படுமா..

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US