ஐ.நாவில் இலங்கை தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 46வது கூட்ட தொடர் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை தொடர்பான பிரேரணை அதிகாரபூர்வமாக சமர்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23ம் திகதி மனித உரிமைகள் பேரவையின் 46வது ஜெனீவாவில் ஆரம்பமானது.
இந்நிலையில், ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் குறித்த தீர்மானத்தை கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தன.
கனடா, ஜேர்மனி, வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பிரேரனை அதிகாரபூர்வமாக சமர்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில் இந்த அறிக்கை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam