எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பது உறுதி
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கையளிக்கவுள்ளதாகப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்தியுள்ளது.
மார்ச் மாதத்துக்கான இரண்டாவது வார நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை(17) ஆரம்பமாகி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாளை கையொப்பங்களைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
அதனைத் தொடர்ந்து அந்தப் பிரேரணை நாளைமறுதினம் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது.
எரிசக்தித் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலை மற்றும் சர்ச்சைக்குரிய தரமற்ற நிலக்கரி இறக்குமதி உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.

அரசின் வலுசக்தி முகாமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam