திருகோணமலையில் பயங்கர விபத்து: சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் பலி
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் பகுதியில் நேற்றையதினம்(15) மாலை இடம்பெற்ற கோர மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, உப்பூறல் பகுதியில் வைத்து வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்திலிருந்த மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதில் மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகினர்.
இந்த சம்பவத்தில் தோப்பூர் 6-ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜௌசீர் அமான் (18 வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த ஏனைய இரு இளைஞர்களும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் கடந்த மாதம் நடைபெற்ற சாதாரண தர (O/L) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்குக் காரணம்
உயிரிழந்த இளைஞனின் உடல் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, திடீர் மரண விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காகச் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக ஈச்சிலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிவேகமே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும் Manithan
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam