கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாயும் மகளும் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று இரவு 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடி 17 லட்சத்து 30ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தகரான பெண் ஒருவரும் மகளுமே இவ்வாறு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாயும் மகளும் கைது
கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் இருவரும் 61 மற்றும் 38 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாயும் மகளும் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு Fly Dubai Airlines இன் F.Z-549 விமானம் மூலம் வந்துள்ளனர்.
இவர்கள் இருவரின் பயணப் பைகளில் இருந்து 78,200 வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சிகரட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸ் பிணையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 13 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குக் வித் கோமாளி 7வது சீசனில் 4வது நடுவராக இணைந்துள்ள பிரபல நடிகை... செம கலக்கல் புரொமோ, யாரு பாருங்க Cineulagam
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam