உச்ச பதற்றத்தில் ஈரான்! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அவசர அறிவிப்பு - நாமல் எச்சரிக்கை
கொழும்பு கட்டுநாயக்க மற்றும் துபாய்க்கு இடையிலான விமான சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
இதன்படி, 17, 18, 21 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கொழும்பிலிருந்து துபாய் நோக்கிப் பயணிக்கும் UL231 விமானமும், துபாயிலிருந்து கொழும்பு திரும்பும் UL232 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொடர்பு மையத்தை இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்திலும், சர்வதேச அளவில் +94 11 777 1979 என்ற இலக்கத்திலும் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை சரியான முகாமைத்துவ நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், நாடு மீண்டும் கடுமையான பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடிக்குள் தள்ளப்படக்கூடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எச்சரித்திருந்தார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri