இலங்கையில் திடீரென வேலைகளை விட்டு வெளியேறியுள்ள இலட்சக்கணக்கானோர்
இலங்கையில் விவசாயத்துறையில் ஒரு வருடத்திற்குள் 100,000 இற்கும் அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச்சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் விவசாயத்துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் விவசாய நடவடிக்கையை விட்டு வெளியேறி வருவதுடன் நாட்டுக்குத் தேவையான விவசாயப் பொருட்களின் உற்பத்தி குறைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், விவசாயத் துறையில் பணிபுரிந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,187,563 ஆக இருந்தது. இது 2024 முதல் காலாண்டில் 2,139,574 ஆகக் குறைந்துள்ளது.
விவசாயத்துறையில் வேலைவாய்ப்பு
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், விவசாயத் துறையில் வேலைவாய்ப்பு மொத்த வேலைவாய்ப்பில் 26.7% ஆக இருந்தது. ஆனால் 2024 முதல் காலாண்டில், இது 25.8% சரிவைக் காட்டியுள்ளது.
இதன்படி, கடந்த ஒரு வருடத்தில் விவசாயத் துறையில் சுமார் 147,989 பேர் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்படும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri