பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் வின்சன் தீபால் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டமானது, இன்று(22.06.2026) காலை 9 மணி அளவில் பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது கடந்த மாத கூட்டத்தின் அறிக்கை ஆராய்ந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் நிதிக் குழு கூட்ட அறிக்கைகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
மேலும், திக்கம்முனை விளையாட்டு மைதானத்தினை பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கான சபை அனுமதி தொடர்பாகவும், உள்ளூராட்சி அமைச்சின் வீடமைப்பு மானிய பயனாளிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வருட நடப்பு மற்றும் வருடத்தின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு நகரத்தின் தேவைப்பாடுகளை முன்னுரிமைப்படுத்தி பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள், வரவு செலவு திட்டத்தினை பெற்றுக் கொள்வதற்கான சபை அனுமதியும் நகர சபை உட்பட பொது இடங்களுக்கான குடிநீர் விநியோகம் வழங்குவது தொடர்பான தீர்மானங்களும் பயிலுனர்கள் இருவரை நியமிப்பதற்கான சபை அனுமதியும், நவீன சந்தை கடை C11 இதற்கான வாடகை ஒப்பந்த பெயர் மாற்றம் தொடர்பாகவும் சபையில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அத்துடன் இன்றைய சபை அமர்வில் அனைத்து உறுப்பினரும் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam