அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு 300 ரூபாய் பணம் அனுப்பிய இளைஞர்கள் குழு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போர்ட்டர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு 300 ரூபாய் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பணத்தை அமைச்சர் பிரசன்ன ரணவீர பெற்றுக்கொள்ளும் வகையில், பண அஞ்சல் முறையின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு இன்று (18) பணம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தம்ம அறக்கட்டளையின் ஸ்தாபகரும், தலைவருமான சமன் பிரியந்த விஜேவிகம உள்ளிட்ட இளைஞர்கள் குழுவினரால் இந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

போர்ட்டர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம்
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கடந்த 14 ஆம் திகதி காலை தனது மனைவியை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த போது சேவை வழங்கும் போர்ட்டருக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என விமான நிலையத்தில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்த பின்னணியில், போர்ட்டருக்கு 700 ரூபாயை இராஜாங்க அமைச்சர் வழங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதன்போது, போர்ட்டரை இராஜாங்க அமைச்சர் தாக்கிய காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri